tamilnadu

img

17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று துவங்கிய நிலையில், கட்டாய கொரோனா சோதனையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி

திங்களன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்களில், பாஜக 12 பேர் என்ற அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டுள்ளது. ஒய்ஆர்எஸ் காங்கிரசுக்கு இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர். சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையானது செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவின் சுகந்தா மஜும்தார் நேற்று தனது கொரோனாவிற்கான சாதகமான நிலையை ட்வீட் செய்துள்ளார். மீதமுள்ள முடிவுகள் பின்னர் வந்தன. 785 எம்.பி.க்களில் சுமார் 200 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஏற்கனவே, ஏழு மத்திய அமைச்சர்கள் மற்றும் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒருவர். அவர் நாடாளுமன்ற  கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். ஒரு எம்.பி. மற்றும் பல எம்.எல்.ஏ.கல் தொற்று நோயால் இறந்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு சபைகளின் அறைகளிலும் உடல் ரீதியான தூரத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வருகையை பதிவு செய்ய ஒரு கைபேசி பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமர்வுக்கு முன்னதாக, அனைத்து உறுப்பினர்களும்  கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

;