நாமக்கல், ஜூன் 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவர் வி.ராம சாமியின் நூற்றாண்டு விழாவிற் கான வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தை முன்னெடுத்து செல்வதில் முன்னணி தோழருமாக விளங்கிய, சுதந்திரப் போராட்ட வீரர் மோளிப்பள்ளி வி.ராமசாமி யின் நூற்றாண்டு விழாவிற்கான வர வேற்புக்குழு அமைப்புகூட்டமா னது திருச்செங்கோடு காவேரி நினைவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு திருச்செங்கோடு நகரச் செயலாளர் ராயப்பன் தலைமை வகித்தார்.
ஒன்றியக்குழு உறுப்பி னர் வேலாயுதம் வரவேற்றார். மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பெருமாள், ஏ.ரங்கசாமி, ஆண்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முன்தாக, தோழர் வி.ராமசாமி யின் அசாத்திய கட்சிப் பணிகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு விசைத்தறி தொழிலாளர் களின் எண்ணற்ற போராட்டங்களில் பங்கெடுத்தது குறித்து நினைவு கூர்ந்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில், தோழர் மோளிப்பள்ளி வி.ராமசாமியின் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப் பாக நடத்துவது எனவும், வரவேற் புக்குழு தலைவராக ஆதிநாராய ணன், செயலாளராக கணேஷ் பாண்டியன், பொருளாளராக மனோ கரன், உதவிச்செயலாளர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் சிஐ டியு, மாதர் சங்கம், எல்ஐசி, சாலை போக்குவரத்து தோழர்கள் அடங் கிய குழுவும், தமுஎகச, விவசாயி கள் சங்கம், வாலிபர் அரங்கம், ஊடகக்குழு உறுப்பினர்கள் அடங் கிய குழுவும் தேர்வு செய்யப்பட் டது.
வரும் ஜூலை 23 ஆம் தேதி யன்று தோழர் வி.ராமசாமி நூற் றாண்டு விழாவை திருச்செங்கோடு கொங்கு சமுதாய கூடத்தில் சிறப் பாக நடத்துவது, அவருடைய நினைவாக சிறப்பு மலர் வெளியிடு வது, இந்நிகழ்வில் கட்சியின் மாநி லச் செயலாளர் ே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது. முடிவில், கணேஷ் பாண்டியன் நன்றி கூறினார்.