பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் சங்க தலைவரை தர தரவென இழுத்துச் சென்ற போலீசார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவியிடம் இயற்பியல் பேராசிரியர் சுந்தரமூர்த்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
பாதிக்கப்பட்ட மாணவி ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தலைமறைவாக உள்ள பேராசிரியர் சுந்தரமூர்த்தியை கைது செய்யக்கோரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் தங்கராஜை தர தரவென குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கல்லூரி மாணவரை அடித்து இழுத்துச் சென்ற காவல் துறையை கண்டித்து மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.