districts

தோட்டத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு

நாமக்கல், ஜன.29- பள்ளிபாளையம், தாண் டான்காடு அருகே வெங்க டாஜலம் என்பவர் தோட்டத் திலுள்ள, வீட்டில் சுமார் 7  அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று பதுங்கி இருந் தது. இதுகுறித்து அவர்  வெப் படை தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில்  தீயணைப்பு நிலைய அலுவலர் ரா.செங் கோட்டு வேலு தலைமையி லான வீரர்கள், அரை மணி  நேரம் போராடி சாரைப் பாம்பை உயிருடன் பத்திர மாக மீட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர்.இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.