நாமக்கல், ஜூன் 12- கபிலர்மலை அருகே வாகனம் ஓட்டி பழகியபோது, சிறுவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக் குள்ளானதில் சிறுவர்கள் இருவரும் பரி தாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், கே.அய்யம்பாளையத்தை அடுத்த பெரியமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சுதர்ன் (14). அதேபகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் லோகேஷ் (17). இருவரும் பெற்றோருடன் கபிலர்மலை யில் வசித்து வந்தனர். இந்நிலையில், திங்க ளன்று இரவு வாகனம் ஓட்டி பழகுவதற்காக கபிலர்மலையில் இருந்து பரமத்திக்கு ஆம்னி வாகனத்தை ஓட்டி வந்தனர். வாகனத்தை சுதர்சன் ஓட்டியுள்ளார். பரமத்திக்குச் சென்ற இருவரும் அங்கிருந்து மீண்டும் கபிலர்மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பாகம் பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது நேருக்குநேர் மோதி யது. இதில் பலத்த காயமடைந்த சிறுவர்கள் சுதர்சன், லோகேஷ் இருவரும் நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தனர். இவ்விபத்தில் மற் றொரு வாகனத்தில் வந்த கபிலர்மலை அருகே உள்ள அடுத்த கருக்கம்பாளையத் தைச் சேர்ந்த விக்னேஷ் (26) படுகாயமடைந் தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக் கல்லிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்ததும் ஜேடர்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த சிறுவர்கள் சுதர்சன், லோகேஷ் ஆகியோரின் சடலங்களை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூ றாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பெற்றோர்களுக்கு அபராதம்
இதுகுறித்த தகவலறிந்த நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் பரமத்தி போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, சுதர்சன் ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டி விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மோட்டார் போக்கு வரத்து அலுவலர் கூறுகையில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங் கள், கார்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இதனால் காரை ஓட்டி சென்று விபத்து நிகழ்ந் ததற்காக சுதர்சனின் தந்தை ரமேஷ் என்ப வருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராதத்தொகையை கட்ட தவறி னால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும், என்றார்.