districts

img

வடசேரி-தடிக்காரன்கோணம் சாலையின் குழிகளை நிரப்பி சீரமைக்க சிபிஎம் மனு

நாகர்கோவில், நவ.20- குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் வடசேரி முதல் தடிக்காரன்கோணம் வரை செல்லும் சாலை மற் றும் தடிக்காரன்கோணம்  முதல் கீரிப்பாறை வரை செல் லும் சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வலியுறுத்தி சிபிஎம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலை மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைப்பது தடிக்காரன்கோணம் வழி யாக செல்லும் ஆரல்வாய் மொழி- நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலை. கேரளத்து டன் தமிழகத்தை இணைக் கும் குமரி மாவட்டத்திலுள்ள மாற்று வழியாகவும் இது  உள்ளது. இந்த சாலை முறை யாக அமைக்கப்பட்டால் கேரளத்தில் தற்போது நடைபெற்று வரும் மலை யோர சாலையின் நீட்சியாக வும் அமையும். இந்த சாலை குலசேகரம்- திற்பரப்பு -களி யல் வழியாக செல்கிறது. குமரி மாவட்டம் மற்றும் திரு வனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களையும் சிறு நக ரங்களையும் இணைக்கிறது இச்சாலை. இந்த சாலையில் வட சேரி முதல் தடிக்காரன் கோணம் வரை ஏராளமான மரணக்குழிகள் உள்ளன. இவற்றில் விபத்து ஏற்படு வது அன்றாட நிகழ்வு. துண்டு துண்டாக எப்போதாவது சாலையின் ஒருபகுதி சீர மைக்கப்படுவதுண்டு. மழைக் காலத்தில் அத்தகைய பணி கள் நடப்பதால் சாலையின்  உறுதி தன்மை நீடிப்பதில்லை. குறுகிய காலத்தில் சீமைக்  கப்படாத இதர பகுதி களைப்போல் மாறிவிடு கிறது. எனவே, இந்த சாலை யை உரிய காலத்தில் முறை யாக போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.எஸ்.கண்ணன் தலை மையில் தோவாளை வட்டார செயலாளர் எஸ். மிக்கேல் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.