districts

img

மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு அவமதிப்பு

நாகர்கோவில், மார்ச் 13-  மாற்றுத்திறனாளி என்பதால் கொல்லங் கோடு நகராட்சி சிபிஎம் கவுன்சிலர் அவ மதிப்புக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து நியாயம் கேட்டவர் மீது கொலைவெறி யுடன் காவல்துறையினர் தாக்குதல் நடத்தி யுள்ளனர். தடுக்க முயன்ற சிபிஎம் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி யையும் தாக்கி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங் கோடு நகராட்சிக்கு உட்பட்ட நம்பாளி பகுதி யின் மன்ற உறுப்பினர் கே.முகமது புறோஸ்கான். மாற்றுத்திறனாளியான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவருமாவார். 

இந்த நிலையில் நம்பாளி பேருந்து நிறுத்தம் அருகே நாகர்கோவில் நாடாளு மன்ற உறுப்பினர்  பரிந்துரையின்படி தொகுதி  மேம்பாட்டு நிதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு  அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா  வெள்ளியன்று (மார்ச் 8)  நடத்தப்பட விருந்தது. திட்டம் விவரம் குறித்த கல்வெட்டு  வைக்கப்பட்டிருந்தது. அதில் நாடாளு மன்ற உறுப்பினர், நகர்மன்ற  தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. புறோஸ்கானின் பெயர் இடம்பெறக் கூடாது என ஏழுதேசம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது, கொல்லங்கோடு நகர்மன்றத் தேர்தலில் புறோஸ்கானை எதிர்த்து போட்டியிட்ட அல்அமீன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.

அதையொட்டி, அதிகாலையில் வைத்த கல்வெட்டை, பகல் வேளையில் ஒப்பந்த தாரர் அகற்றியுள்ளார். இத்தகவல் அறிந்த தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்  அறிந்து வந்த கொல்லங்கோடு காவல்துறை யினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி மீண்டும் பெயர்ப்பல கை வைத்து முறைப்படி திறக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினரும் வராத நிலையில் திறப்பு விழா நடைபெறவில்லை.

இந்நிலையில் செவ்வாயன்று (மார்ச் 12) நாடாளுமன்ற  உறுப்பினரின் பெயர் மட்டும் கொண்ட புதிய  கல்வெட்டு பொருத்தப் பட்டது. மாலையில் அதைத் திறக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் பொது மக்கள் நியாயம் கேட்டுள்ளனர். இந்நிலை யில், நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்த அல்அமீன், சதீஷ் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர், சிபிஎம் முஞ்சிறை வட்டாரக் குழு  உறுப்பினர் அனிஷ் மீது தாக்குதல் நடத்தினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி தடுக்க முயன்றார். அப்போது நித்திரவிளை காவல் ஆய்வாளர் இக்னோஸ் குமார்,  இருவரையும் தாக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

காவல்நிலையத்தை முற்றுகை
உடனடியாக நித்திரவிளை காவல் நிலையத்தை பொதுமக்களும் சிபிஎம் ஊழியர்களும் முற்றுகையிட்டனர். பின்னர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் அனிஷ் ஆகிய இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதற்குள் மருத்துவமனை அருகில் திரண்ட கட்சி ஊழியர்களும் பொதுமக்களும் காவல்துறை தாக்குதலை கண்டித்து முழக்க மிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது போல் நாகர்கோவில், அருமனை ஆகிய இடங்களிலும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நித்திரவிளையில் புதனன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.