நாகர்கோவில், மார்ச் 8- சமூக அடிமைத்தனத்திலிருந்து விடு தலை பெற நடந்த முதன்மையான போ ராட்டமான தோள் சீலை போராட்டத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். நாகர்கோவிலில் மார்ச் 6 அன்று நடை பெற்ற தோள்சீலை போராட்டத்தின் 200ஆம் ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் அமைச் சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: இந்திய துணைக்கண்டத்தில் கங்கை முதல் இலங்கை வரை பரந்து பட்டு வாழ்ந்த இனம் திராவிட இனம். திராவிட இனத்தை சார்ந்தவர்கள் பேசிய மொழிகளில் மூலமொழி தமிழ். தமிழ் மொழியின் தொன்மை 3,800 ஆண்டுகள் என்கின்ற னர் ஆராய்ச்சியாளர்கள். பெரிய கலாச்சா ரத்துடன் வாழ்ந்தனர் திராவிடர்கள். இந் நிலையில், கிறிஸ்து பிறப்பிற்கு 1,500 ஆண்டுகள் முன்பு கைபர், போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர் கூட்டம், திராவிடத்தைக் அடிமைப்படுத்தி, வேதங்களை, மனுதர்மங்களைக் கூறி சாதிவாரியாக வேறுபடுத்தி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனக்கூறி நம்மை உரிமைகள் அற்ற மனிதர்களாக ஆண்டார்கள். உலகில் சாதிய வேறு பாடு எங்கும் கிடையாது. இந்தியாவில் மட்டும் சாதிய பாகுபாடு ஏற்படுத்தி கொடுமைப்படுத்தினர். உடன் கட்டை ஏறுதல் என்ற கொடுமையை தனது சொந்த அண்ணிக்கு ஏற்பட்டதால் ராஜா ராம்மோகன் ராய் எதிர்த்தார். ஆனால் அதனை அவரால் பெரும் போராட்டமாக முன்னெடுக்க முடியவில்லை. 1822-ல் ஏற்பட்ட தோள்சீலை போராட்டம் இந்திய துணைக் கண்டத்தின் முதல் போராட்டமா கும். மக்களுக்கு தாங்கள் விரும்பும் உடை அணிய வேண்டும் என்ற போராட்டம். இது தோள்சீலை போராட்டம் என்றும் மேலாடை போராட்டம் என்றும் சரித்தி ரத்தில் இடம் பெற்றுள்ளது. திருவி தாங்கூரில் ஏற்பட்ட இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. அடிமைத்த னத்திற்கு எதிரான இந்த போராட்ட வர லாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே இந்த 200 ஆண்டு பொதுக் கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
இக்கூட்டத்தில் கன்னியாகுமரி நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆற்றிய உரையின் போது கூறியதாவது: குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது அதிகார வர்க்கத்தின் பிடியில் பல சமுதாய மக்களும் அடிமைகளாக நடத்தப்பட்ட னர். தீண்டாமை என்னும் கொடுமை க்கு பெரும்பான்மை மக்கள் உட்படுத்தப் பட்டனர். உடலின் மேல் பகுதியை மறைப்ப தற்கு கூட நமது பெண்களுக்கு உரிமை இல்லாமல் இருந்த காலம். ஆனால் பெண்களின் போராட்டம் சக்தி முன் தோற்றது மன்னருடைய ஆட்சி. இதுவே நமது வரலாறு. இந்த போராட்டத்தில் அய்யா வைகுண்டரின் பங்களிப்பு எடுத்துச் சொல்ல வேண்டிய ஒன்று. சமூக நீதிக்கா கவும், தீண்டாமையை எதிர்த்தும் மக்களை வழிநடத்தி ஆண்கள் எழுந்து நிற்கவும் தலப்பாகை அணியவும் சொல்லி, பெண்கள் திறந்த மார்பகத்துடன் சமூ கத்தில் இருக்கக் கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தியவர் அய்யா. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரும் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.