districts

img

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவியல் இயக்கத்தினர் பாராட்டு

நாகர்கோவில்,  மார்ச் 30- கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் வழங்கிய சிறப்பான சேவைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் பாராட்டி சிறப்பித்தனர். செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள். தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டுசென்றது உள்ளிட்ட சிறப்பான பணிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குமரி மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டினர். குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று அவர்களை ஒன்றிணைத்து அவர்களைப் பாராட்டியதுடன், இனிப்பு வழங்கி பாராட்டு கேடயம் வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.  அறிவியல் இயக்க நாகர்கோவில் மாநகர தலைவர் மலர்விழி தலைமையில் செயலாளர் பென்னட் ஜோஸ், கவுரவ தலைவர் அந்தோணி பால், பொருளாளர் லூர்து, மாவட்டச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாவட்ட பொருளாளர் செல்ல தங்கம், துணைத் தலைவர்டோமினிக் ராஜ் ஆகியோர் வடசேரி மற்றும் தொல்லவிளை ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பாராட்டினர். அறிவியல் இயக்கம், எங்களது சேவையை பாராட்டி கவுரவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற மக்கள் இயக்கத்தின் உதவி பாராட்டுதலுக்கு உரியது. தற்போது 7 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர். அதுகுறித்து அறிவியல் இயக்கம் சார்பில் விழிப்புணர்வை உருவாக்கி அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.