நாகர்கோவில், நவ.20- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை மேற்கொள் வது குறித்து, துறை சார்ந்த அலு வலர்களுடனான கலந்தாலோசனைக்கூட் டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் சனியன்று (நவ.19) நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற் கொண்டு தெரிவிக்கையில், கன்னியாகும ரிக்கு நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களிலிருந்து அதிக மாக வருகை தரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஏற்படுத்தி தர வேண்டுமென அறிவுறுத் தப்பட்டது. மேலும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற் றுலா பயணிகளின் வாகனங்களை போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக இடங் களை ஏற்பாடு செய்வதோடு, இரவு நேரங்க ளில் எந்தவித ஐயமும் இல்லாமல் பொது மக்கள் நடந்து செல்ல ஏதுவாக தெரு விளக்குகள் அனைத்தும் எரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மின்சா ரத்துறை, பொதுப்பணித்துறை (மின்சாரம்) உறுதி செய்திட வேண்டும். மேலும் கன்னி யாகுமரியை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதி களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அலுவலர் கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள்மீது கடும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட் சுமி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.