districts

img

அக்னி பாதைக்கு எதிராக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜுன்.28- ராணுவத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் ஒப்பந்த முறை நியமனமான அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். லீமா றோஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சிங்காரம், கூட்டுறவு சங்க தலைவர்கள் வின்சென்ட், அயூப் பேசினர். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் திட்டுவிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்னிபாதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்களன்று (ஜுன் 27) நடைபெற்றது. வட்டார செயலாளர் மிக்கேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.