districts

போதைப்பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

நாகர்கோவில், ஏப்.2- கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறை மற்றும் தனியார் அமைப்பான திருப்பு முனை இணைந்து நடத்திய முதன்மை தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நாகர் கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.  இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு, முதன்மை  தன்னார்வலர்கள் மற்றும் குடி பழக்கத்தி லிருந்து மீண்டவர்களிடையே பேசுகையில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டு  வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்  கொள்ள காவல்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, உயர் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, போதைப்பொருட்கள் உட்கொள்ளும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நல்  ஆலோசனை வழங்கி, அப்பழக்கத்திலி ருந்து விடுவிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முழு வீழ்ச்சில் ஈடுபட்டு வரு கிறது.  குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனி யார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் உட்கொள்ளப் படுவதை கண்காணித்து போதைப்பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை கண்டறிந்து அவர் களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கு  வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது.  மேலும், பொதுமக்கள் போதைப் பொருட்கள் விற்கும் நபர்கள் குறித்த தக வல்களை 7010363173 செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறும், இத்தகவல் மிகவும் இரகசியமாக வைக்கப்படும் என்ப தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என் றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, திருப்புமுனை இயக்குநர் அருட்பணி.நெல்சன், தன் னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்  டார்கள்.