districts

img

கன்னியாகுமரியில் 5 ஆவது நாளாக கடலில் இறங்க தடை

நாகர்கோவில், மே 9- தென் இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை  பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்து உள் ளது. இதனால் கடந்த 4-ஆம் தேதி குமரி மாவ ட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5 வது நாளாக கடல் சீற்றம் நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்று லாத்தலமாக விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநி லங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகின்ற னர். கடல் நடுவே அமைந்துள்ள விவேகா னந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை  படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டு வதோடு, காலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்ற னர். இந்த நிலையில் கன்னியாகுமரி கட லோர பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. மேலும் கடலில் ராட்சத அலைகள் எழுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னி யாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் கடலுக்குள் இறங்கிடாத வகையில் அங்கு கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள் ளன. அந்த பகுதியில் உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் இணைந்து தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கடலில் இறங்கச் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறார்கள். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா காவலர்கள் எச்ச ரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்.

இதற்கிடையில் கன்னியாகுமரியில் வியாழனன்று காலை கடல் நீர்மட்டம் திடீர்  என்று தாழ்ந்தது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் நீர்மட்டம் தாழ்வாக காணப் பட்டது. அதேவேளையில் இந்திய பெருங் கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்ற மாக காணப்பட்டன. இதனால் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவே கானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

எனவே பூம்புகார் கப்பல் போக்குவரத் துக் கழக படகுத் துறை நுழைவு வாயிலில்  காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்கு வரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரைகளி லும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இங்கும் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. இருப்பினும் குறைந்த அளவு வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மேலும் கன்னி யாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரியும் நடத்தப்பட வில்லை.

 

;