districts

தேர் சக்கரத்தில் சிக்கி ஸ்தபதி உயிரிழப்பு அமைச்சர் அஞ்சலி

நாகப்பட்டினம், ஏப்.30 - நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் புகழ்பெற்ற உத்திர புரீஸ்வ ரர் கோவில் இருக்கிறது. இக்கோவில் வேலகுறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். வெள்ளியன்று இரவு  நடைபெற்ற கோவிலின் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘தெருவடைச்சான் சப்பரம்’ என்ற பெயர் கொண்ட தேர் வீதிகளில் இழுக்கப்பட்டு வந்தது.  அப்போது தேர் சக்கரத்திற்கு கட்டை போடும் பணி யில் ஸ்தபதி தீபராஜன் (34) ஈடுபட்டு வந்தார். எதிர்பா ராத விதமாக தீபராஜன் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந் தார். தீபராஜனின் உடல் கூராய்வுக்காக நாகை மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. அவரின் உடலுக்கு அமைச்சர் சிவ.வி. மெய்ய நாதன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.