நாகப்பட்டினம், மார்ச் 11 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த 75 அணக்குடி ஊராட்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதற்கு சிபிஎம் கிளை செயலாளர் டி.ஜோதிபாசு தலைமை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் கனகரத்தினம், 75 அணக்குடி மன்ற தலைவர் கஸ்தூரி கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.