வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவிற்கு தலைஞாயிறு ஒன்றியக்குழு சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் டி.லதா, நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.