districts

img

பொங்கல் பண்டிகை: மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்

வேதாரண்யம், ஜன.9 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், தரகமருதூர், செட்டி புலம், செம்போடை பகுதிகளில் மண் பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ள னர். இவர்கள் பல தலைமுறையாக மின் மோட்டார் உதவி இல்லாமல் மரச் சக்க ரத்தை வைத்து கையால் பானை, சட்டி, அடுப்பு, கும்பாபிஷேக கலயங் கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் தொட்டி, தண்ணீர் தூக்குவதற்கு மண்கு டம் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் செய்து வருகின்றனர். மண்பாண்டம் செய்ய பயன்படுத்தும் மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு லோடு வேன் களிமண் ரூ.4000 முதல் 7500 வரை  வாங்கி மண்பாண்டங்களை செய்கின்ற னர்.  இந்த ஆண்டு பொங்கல் பண்டி கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள  நிலையில், மண்பானை மற்றும் அடுப்பு,  சட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கஜா புயலுக்கு பிறகு மண்பாண்ட தொ ழில் மிகுந்த சிரமத்தில் உள்ளது. ஒரு  வாரத்திற்கு முன்னதாக பெய்த தொடர்  கனமழையால் மண்பானை தயாரிக் கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டதால், தயாரித்த சட்டி, பானைகளை வீட்டிற் குள்ளேயே காய வைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டி கையையொட்டி ஆயிரக்கணக்கான சட்டி, பானை, அடுப்புகள் தயார் செய்து  வந்த நிலையில், தொடர் மழையால் இந்த ஆண்டு, 500-க்கும் மேற்பட்ட பானை, சட்டி, அடுப்புகள் செய்து வரு கின்றனர். தொடர் மழையால் மண்பா ண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி  பாதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்டங் கள் செய்து சுடுவதற்கு சரியான சூளை  வசதி கூட இல்லை. வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதி யில் தொழிலாளர்கள் மின்மோட்டார் வைத்து சட்டி, பானைகளை செய்ய வசதி இல்லாமல், மரச் சக்கரம் வைத்து  மண்பாண்ட பொருட்களை  தயாரித்து வருகின்றன.

இதனால் அதிக அளவில்  மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்ய முடியவில்லை. இவர்கள் அனை வரும் வறுமைக் கோட்டிற்கு கீழே  உள்ளவர்கள். மண் சட்டி, பானைகளை  ரூ.50 அல்லது ரூ.65 என்ற விலைக்கே  வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.  இது கூலிக்குகூட கட்டுப்படியாகவில்லை.  பொங்கல் பண்டிகைக்கு மண் பானை மற்றும் அடுப்பு விற்பனை அமோகமாக இருக்கும் என நினைத்து உற்பத்தி தொடங்கிய நிலையில், மழை யால் மண்பானை தயாரிக்கும் தொழில்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மழைக்கால நிவாரணம் வழங்க வேண் டும். வங்கி கடன் கொடுத்து உதவினால்  மின் மோட்டார் பொருத்தி மண்பாண்டங் களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடு வோம் என மண்பாண்ட தொழிலாளர் கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள னர். (ந.நி)