நாகப்பட்டினம், ஏப்.3- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நாகை ஒன்றி யம் வடவூர் ஊராட்சியில் உள்ள சேர்வைக் காரன் தோப்பு கிராமத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தின் சார்பில் வைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி பயன் பாட்டுக்கு கொண்டு வந்தார். இம்மின்மாற்றி மூலம் சேர்வைக்காரன் தோப்பு, வடவூர் வடபாதி, தென்பாதி உள் ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும். நிகழ்வில் வடவூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், திமுக நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் வடவூர் க. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.