districts

img

பயன்பாட்டிற்கு வந்த புதிய மின்மாற்றிகள்: நாகைமாலி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாகப்பட்டினம், மே 21 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்ட மன்றத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஊராட்சி யில் இரண்டு புதிய மின்மாற்றிகளை செயல் பாட்டுக்கு கொண்டு வந்தார் நாகைமாலி எம்எல்ஏ. நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றி யம் புதுச்சேரி ஊராட்சியில் உள்ள விக்கண்ண புரம் மெயின் சாலையில் ஒரு மின்மாற்றியும், புதுச்சேரி கீழத்தெரு பகுதியில் ஒரு மின் மாற்றியும் என இரண்டு மின் மாற்றிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதனால் அப்பகுதியில் வாழும் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுவர். நீண்ட காலமாக மின்  பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி  விவசாய பெருங்குடி மக்களின் கோரிக் கையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்றியதற்கு மக்கள் நன்றி தெரிவித்த னர்.  இந்நிகழ்வில் புதுச்சேரி ஊராட்சி மன்ற  தலைவர் கோமதி ஜீவாராமன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே.செந்தில்குமார், விவசாயிகள் சங்க நாகை ஒன்றிய தலை வர் ஜீவாராமன், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.