districts

img

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் : நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் மாறி சென்றாலும் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் அருகே பனங்குடி ஊராட்சியில் உள்ள சிபிசிஎல் ஆலை நுழைவாயிலில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.சிவனருட்செல்வன் தலைமை தாங்கினார்.கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி  உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் சு.சிவகுமார், ஏ. எஸ்.பழனியம்மாள் மாவட்ட பொருளாளர் என்.வெற்றிவேல் உள்ளிட்டோர் பேசினர்.