districts

img

நாகை சங்கமம் - 75 ஆவது சுதந்திர தின அமுத பெருவிழா

நாகப்பட்டினம்,  மார்ச் 22 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்ச் 20 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை நாகை சங்கமம் மற்றும் 75 ஆவது சுதந்திர தின அமுது பெருவிழா நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகை சங்கமம் மற்றும் 75 ஆவது சுதந்திர தின அமுது பெருவிழா மார்ச் 20 அன்று நாகை புதிய கடற்கரை பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மகளிர் சுய உதவி குழுக்களின் அரங்குகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள காட்சி அரங்குகள் என துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் பல்வேறு காட்சி அரங்குகள் வைக்கப்பட்டுள்ளன. அரசுத் துறைகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள காட்சி அரங்குகள் பொது மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் பார்வை அரங்குகளை திறந்து வைத்தார். மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளராகவும் நாகை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய தோழர் கே.ஆர்.ஞானசம்பந்தனின் படம் இடம்பெற்றுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் மார்க்சிஸ்டுகளின் பங்கு மகத்தானது.