திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழ்வேளூரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். நாகை மாலி எம்எல்ஏ., வி.மாரிமுத்து, கோ.பழனிசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.