districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் பகுதியில் உள்ள துளசியாப்பட்டினம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், கிளை செயலாளர் எம்.சேகர் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஒன்றியக் குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் செங்கொடியினை ஏற்றி வைத்தார். வேதாரணியம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி வரவேற்றார். விதொச ஒன்றியச் செயலாளர் வி.இளையபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.