நாகப்பட்டினம் டிச. 25 - வரலாறு காணாத புயல் மழை - வெள்ளப் பாதிப்பிற்கு, தமிழ்நாடு அரசு கோரிய ரூ. 21 ஆயிரம் கோடி நிதியை வழங்கா மல் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்து, சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது.
நாகை மாவட்டம், கீழவெண் மணியில் வர்க்கப் போரில் உயிர்நீத்த 44 தியாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் 55-ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் இயற்கை இடர்பாடுகளை சந்தித்து வரும் இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 55-ஆவது ஆண்டாக வெண்மணி வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மறுபுறம் காவிரி பாசனப் பகுதிகளில் கடுமை யான வறட்சியை சந்திக்க வேண்டியது இருக்கிறது.
மத்தியில் இருக்கும் ஒன்றிய மோடி அரசு மத வெறியை அடிப்படையாக வைத்து, உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை குலைத்து, வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறது. பெரும் பான்மை மக்களுக்கும் சிறு பான்மை மக்களுக்கும் மதக்கலவரத்தை உண்டாக்கி ஒற்றுமையை சீர்குலையச் செய்கிறது. ஒரு பேரிடர் ஏற்பட்டால் மக்கள் எவ்வளவு துயரத்திற்கு ஆளாகுவார்களோ அதேபோன்று இந்த நாட்டை நாசமாக்கும் ஒரு பேரிடர் ஆட்சி யை பாஜக ஒன்றிய ஆட்சி யதிகாரத்தில் இருந்து நடத்திக் கொண்டிருக்கிறது. மோடி அரசை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத் தோடு ‘இந்தியா’ கூட்டணி யோடு இணைந்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம்.
சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். இந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து மக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக முதல்வர் மோடியிடம் ரூ. 21 ஆயிரம் கோடி கேட்ட போது, ஒரு ரூபாய் கூட தரா மல் தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலில் ஒன்றிய மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாக வோ அல்லது நிவாரணமோ கொடுப்பதற்கு பதிலாக தில்லியில் அமர்ந்து கொண்டு விதண்டாவாதம் செய்து கொண்டு பேட்டி கொடுப்பது மக் களைப் பழிவாங்கும் செய லாகும்.
இந்த இக்கட்டான சூழ்நிலை யில் முதலமைச்சர் கேட்ட ரூ. 21 ஆயிரம் கோடியைக் கொடுக் காத ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 3 அன்று சென்னையில் இருக்கும் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திட்டமிட்டு இருக்கிறோம்.
ஒன்றிய அரசு எவ்வித நிதியும் கொடுக்காதபோது ஒட்டுமொத்த நிவாரண பணியையும் மாநில அரசின் மீது சுமத்துவது, பாரபட்சமாக நடந்து கொள்வது ஆகும். ஊழல் குற்றச்சாட்டு என்று வரும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கின்ற தலைவர்கள் மீது தான் எவ்வித வழக்குமில்லை. ஆனால், அண்ணாமலை அங்கம் வகிக்கும் பாஜக மீது ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. எனவே, ஊழலைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எவ்வித அருகதையும் இல்லை.
இவ்வாறு கே. பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.