நாகப்பட்டினம், ஜூன் 20 - தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி யில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சி யில் அங்கன்வாடி மையத்தை வி.பி. நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார். திமுக நாகை தெற்கு ஒன்றியச் செயலா ளர் வடவூர் க.ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சியில் உள்ள பரவை காய்கறி சந்தைக்கு வரும் விவசாயிகள், வியா பாரிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை திறந்து வைத் தார். பரவை காய்கறி சந்தையானது, நாகை மாவட்ட விவசாயிகள், வியா பாரிகள் மட்டுமல்லாது பல்வேறு மாவட் டங்களிலிருந்து வந்து, வியாபாரிகள் காய்கறி வாங்கிச் செல்லும் இரவு நேர சந்தையாகும். அங்கு வந்து செல்லும் பொதுமக்கள், வியாபாரி கள், விவசாயிகளுக்கு இந்த சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் பய னுள்ள வகையில் அமையும் என்பது குறிப் பிடத்தக்கது.