districts

img

விபத்தில் படுகாயமடைந்தவர் தமிழக முதலமைச்சருக்கு மனு

வேதாரண்யம், அக்.2- நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யத்தை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் வேதமூர்த்தி.  இவர், 2022 பிப்.11 அன்று  வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து  சென்று கொண்டிருந்த போது, மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த ஆன்றகாட்டைச் சேர்ந்த ரமேஷ்குமார் இவர் மீது மோதினார். இதில் வேத மூர்த்தி உடம்பு மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டு வேதாரண்யம் அரசு  மருத்துவமனையில் முதலு தவி அளிக்கப்பட்டு, பின்னர்  மேல்சிகிச்சைக்காக நாகப் பட்டினம் கொண்டு செல்லப் பட்டார்.  அங்கு பார்க்க முடியா மல், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர் வலது கை-கால், வலது கால் பக்கம்  அடிபட்டு கால் எலும்பு முற்றிலும் முறிந்துவிட்டன. கண்பார்வை மங்கி உள்ளது  என தெரிவித்தனர். தற்போது தொடர் சிகிச்சை க்குப் பிறகு, கடந்த 2 மாதத் திற்கு முன்பு ஊருக்கு வந்த வேதமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித் தும் காவல்துறையினர் நட வடிக்கை எடுக்கவில்லை. வாகனத்தை இவர் மோதிய ரமேஷ்குமார் வெளிநாடு சென்றுவிட்டார்.  தற்போது வேதமூர்த்தி மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாடி வரு கிறார். இந்நிலையில் பல முறை அரசு அதிகாரி களிடம் மனு அளித்தும் எந்த வொரு நடவடிக்கை எடுக்க வில்லை என்பதால், தமிழக  முதலமைச்சரின் தனிப்பிரி வுக்கு மனு அனுப்பியுள்ளார்.

;