நாகப்பட்டினம், ஜூன் 7- நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மீன்வளப் பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றுவதாக பேசிய மீன்வளத் துறை அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரி முத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்தி ருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் விவ சாயம் சார்ந்த மாவட்டம். இம்மாவட்டத் தில் விவசாயிகள் தொடர்ந்து இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகி விவசாயம் பாதிக்கப்பட்டு நஷ்டமடைவது தொடர் கதையாக உள்ளது. மாவட்டத்தில் விவசாயத்தை அடுத்து, அதிகளவு தொழிலாளர்கள் ஈடுபடக் கூடிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. 188 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையில் பிரதானமாக மீன்பிடித்தல், உலர் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு உட்பட விவசாயத் திற்கு அடுத்த பொருளாதார மையமாக மீன்பிடித் தொழில் திகழ்கிறது. இந்நிலையில், நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. முன்பு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த பல்கலைக்கழகம் பின்னர் நாகூர் அருகாமையில் உள்ள பனங்குடி ஊராட்சியில் 85 ஏக்கர் நிலப் பரப்பில் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப் பட்டு இயங்கி வருகிறது. ஜூன் 5 அன்று தூத்துக்குடி மீன் வளக் கல்லூரியில் நடைபெற்ற விழா வில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
“நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகம் செயல் பட்டு வருகிறது. இதனால் துணை வேந்தர் நாகை, தூத்துக்குடி, சென்னை என்று பல இடங்களுக்கு செல்ல வேண்டி யுள்ளது. இதனால் நிர்வாகத்தில் பல இடர்பாடுகள் ஏற்படுகிறது. எனவே மீன்வளப் பல்கலைக் கழகத்தை சென்னைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி, அவர்களின் அனுமதியோடு விரை வில் சென்னையில் மீன்வளப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறிய கருத்து ஏற்கக் கூடியதாக இல்லை. சென்னை, நாகை, தூத்துக்குடி என வந்து போக, துணை வேந்தரால் முடியவில்லை என்றால், துணைவேந்தரை மாற்ற வேண்டுமே தவிர பல்கலைக்கழகத்தை அல்ல. ‘விர லில் பட்ட காயம் குணமாக, மருந்து தான் தேவையே தவிர விரலை வெட்டு வது தீர்வாகாது’. எனவே மீன்வளத் துறை அமைச்ச ரின் கருத்து தவறானது என்பதை சுட்டிக் காட்டுவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட குழு சார்பில் கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். மேற்கண்ட விஷ யத்தில் தமிழக முதல்வர் உடனே தலை யிட வேண்டும். நாகை பழமையான துறைமுக நகரம். தற்போது தன்னுடைய பழமையான பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. பயணிகள் கப்பல், சரக்கு கப்பல் இயக்கத்தின் பெரும் பகுதி நின்று போனதாலும், 3000 தொழி லாளர்கள் பணிபுரிந்து வந்த உருக்கு உருட்டாலை இருந்த இடம் தெரியாமல் குடியிருப்பு மனைகளாக மாறிவிட்டன. பல ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வந்த ரயில்வே பணிமனை பொன் மலைக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இருப்பதை இழந்து கொண்டிருக்கக் கூடிய மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் மாறிக் கொண் டிருக்கிறது. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு, ‘மீன்வளப் பல்கலைக்கழகம் தொடர்ந்து நாகையில்தான் இயங்கும்’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.