நாகப்பட்டினம், அக்.29 - நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் கல்வி கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கலந்து கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவியருக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 18 வங்கிகள் கலந்துகொண்ட இந்த மேளா வில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி யர்கள் விண்ணப்பம் வழங்கியுள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பண வசதி யின்மையால் உயர்கல்வி படிக்க முடியா மல் தவித்து வருகின்றனர். மாணவர்களின் இத்தகைய சூழ்நிலையை போக்குவதற்கு, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உயர்கல்விச் செலவிற்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. நான்கு லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் கோரும் மாணவர்களுக்கு மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் ணும், பட்டியல் பிரிவை சார்ந்த மாண வர்கள் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றி ருக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் மரு. அருண்தம்புராஜ், நாகப்பட்டி னம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் ஷா நவாஸ் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் படிவத்தை வழங்கினர்.