வேதாரண்யம், மார்ச் 5 - நாகப்பட்டினம் மாவட்டம் மூலக்கரை கிராமத்தில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க கோரி காலிக் குடங்களுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், வேதா ரண்யம் வட்டாட்சியர் ரவிச் சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (வேதா ரண்யம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட) அதிகாரி ராம சாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வெற்றியழகன், மூலக் கரை கிளை செயலாளர் சிங்காரவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் சார்பில் நீர் மற்றும் மோட்டார்கள் பரா மரிப்பு, இயக்குனரின் சோதனை நடைபெற்று வரு கிறது. இனி தினசரி குடிநீர் வழங்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். இத னால் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.