நாகப்பட்டினம், பிப்.5- நாகப்பட்டினம், திரு வாரூர் மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், நெற்பயிர் கள் முற்றி அறுவடை க்கு தயா ராகி உள் ளன. இந்நிலையில் டெல்டா பாசனப் பகுதியில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து முற்றி லும் குறைந்து விட்டதால், முற்றிய நெற்பயிர்கள் கரு கும் நிலையில் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
டெல்டா மாவட்ட பகுதி களில் கருகிக் கொண்டிருக் கும் நெற்பயிர்களை காப்பா ற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்திற்குத் தான் உட னடியாக தண்ணீர் தேவைப் படுகிறது.
எனவே வெண் ணாறு பாசனத்தில் நான்கு டிஎம்சி தண்ணீரை உடனடி யாக திறந்துவிட ஆவன செய்ய வேண்டும். வெண் ணாற்றில் நான்கு டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டால் தான் நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயத்தையும், விவசாயிகளையும் பாது காக்க முடியும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரு கிறேன். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.