நாகப்பட்டினம், டிச.3- நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டு றவு பொதுப்பணியாளர்களால் நடத்தப் படும் நியாய விலை கடையில் 5 கிலோ எடையுள்ள எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழா நடை பெற்றது. நிகழ்வை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி துவக்கி வைத்தார். பொதுமக்களின் வசதிக்காக ஒருவர் ரூ.1499 செலுத்தி முதற்கட்டமாக 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளையை பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் காலி யான எரிவாயு உருளையை கொடுத்து ரூ.555 செலுத்தி மீண்டும் ஒரு புதிய எரி வாயு உருளையை பெற்றுக் கொள்ள லாம். இதற்கு எவ்வித ஆவணங்களும் தேவையில்லை. அருகிலுள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்களில் இந்த காலி யான எரிவாயு உருளையை கொடுத்து மாற்று எரிவாயு உருளையை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்பு ராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, மக்கள் தொடர்பு அலு வலர் மீ.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.