districts

img

சோழவித்தியாபுரத்தில் வருமுன் காப்போம் திட்டம்: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்றார்

நாகப்பட்டினம், ஜன.24- நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கலந்து கொண்டார். முகாமை நாகப்பட்டினம் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மரு.அ. அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உமதிவாண் ஆகி யோர் பார்வையிட்டனர். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிறப்பு மருத்துவமாக பொது மருத்துவம், குழந்தை மருத்து வம், தோல் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு, மனநலம், காது, மூக்கு,  தொண்டை, பல், அறுவை சிகிச்சை தொடர்  பான மருத்துவம், கண் மருத்துவம், சித்த  மருத்தவம், காசநோய், தொழு நோய் சிகிச்சை மற்றும் சர்க்கரை அளவு, ரத்த  அழுத்தம், கொழுப்பு, ஸ்கேன் பரி சோதனை, இசிஜி, கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றன.  டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்  பேறு மருத்துவ திட்ட பதிவு, முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவு போன்றவை நடைபெற்றன. இந்நிகழ்வில் சோழவித்தியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.