districts

கம்பத்தில் மனைவியைக் கொன்ற  சிறப்பு சார்பு ஆய்வாளர் இடைநீக்கம்

 தேனி, மார்ச் 4- கம்பத்தில் இரண்டாம் மனைவியை கொலை செய்த வழக்கில் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்  குமாரை  இடைநீக்கம் செய்து  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.  தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கம்பம் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளராக  பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த கம்பம் மெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த அமுதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அமுதாவுக்கு ஏற்கனவே திருமண மாகி ஒரு மகள் உள்ளார். ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதில் அவர் அமு தாவை தாக்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் அமுதா வழக்கை திரும்பப் பெற்றதால் ஜெயக்குமார் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அமுதாவுடன் மீண்டும் தகராறு  ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் அமுதாவை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.  இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர்  ஜெயக்  குமாரை கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். 

;