districts

தனியார் கல்லூரியில் மதவெறி அமைப்பு பயிற்சி முகாமை தடுத்து நிறுத்துக!

தேனி, ஜூலை 12- தேனியில் தனியார் கல்லூரியில் மதவெறி அமைப்பு சார்பில் நடைபெற  உள்ள  பயிற்சி முகாமை   தடுத்து நிறுத்தக் கோரி தேனி ஆட்சியர் ,காவல் கண்காணிப்பாளர்  ஆகியோரிடம் இடதுசாரி மாணவர் -வாலிபர் அமைப்பு கள் புகார் தெரிவித்துள்ளன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ஆர்.லெனின், மாவட்ட செயலாளர் சி. முனீஸ்வரன், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட செயலாளர் உதுமான் அலி, அகில இந்திய மாணவர் பிளாக் தேசி யக்குழு உறுப்பினர் திவாகரன் ,இந்திய  மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி. நாகராஜ், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாவட்டச் செயலாளர்  ரஞ்சித் குமார், அகில இந்திய ஜன நாயக மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பிஜு உள்ளிட்ட இடதுசாரி மாணவர் -வாலிபர் அமைப்புகள் சார்பில் தேனி ஆட்சியர் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந் தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தேனி அருகே வீர பாண்டியில் இயங்கி வரும் தேனி செளராஷ்ரா அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், சங் பரிவார் அமைப்பா கிய பாரதீய பண்பாட்டு சேவா கேந்தி ரம் என்ற அமைப்பு அக்னிபாத், அக்னி வீர் என்ற பெயரை பயன்படுத்தி இல வச பயிற்சி முகாம் என்ற பெயரில் ஜூலை 15,16,17 ஆகிய தேதிகளில் மாண வர்கள், வாலிபர்களுக்கு பயிற்சி  அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. வாலிபர்களின் கனவு களை பறிக்கும் அக்னி பாத் போன்ற  திட்டங்களை பெரும்பாலான அரசியல்,  வாலிபர் அமைப்புகள் எதிர்ப்பு தெரி வித்து வரும் நிலையில், அத்திட்டத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான மாணவ -மாணவிகள் பயின்று வரும் கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட சங்  பரிவார் அமைப்பினரின் பயிற்சி முகாமை அனுமதிக்கக் கூடாது. மேலும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்த அனுமதிக்கும்  தேனி செளராஷ்ரா அறிவியல் மற்றும் கலை  கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வில் தெரிவித்துள்ளனர்.