districts

img

நீட் தேர்வில் 615 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகள்

தேனி, ஜூன் 7- மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் 615 மதிப்  பெண்கள் பெற்று ஆண்டிபட்டி கிரா மத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி யின் மகள் சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஜி.இராமலிங்கபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் முத்து முருகன். இவர் பால் கறக்கும் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மூத்த மகள் பௌசியா  (20). இவர் ஆண்டிபட்டியில் உள்ள ஜக்கம்பட்டியில் உள்ள தனி யார் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தவர், அதே பள்ளி யில் பனிரெண்டாம் வகுப்பு வரை  படித்தார். 2020-21 ஆம் ஆண்டில்  பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற் றார். பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 600க்கு 563 மதிப்பெண்களை பெற்றார்.

இதனையடுத்து இவர் சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து  வந்தவர், நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டி தேனியில் உள்ள  நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து இரவு பகலாக படித்தார்.பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் மூன்றாவது முயற்சியில் நீட் தேர்வை எழுதிய மாணவி பௌஷியா 720 க்கு, 615 மதிப் பெண்கள் பெற்று தேர்வில் தேர்ச்சி  பெற்றார்.

இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராமப்புற மக்களும் நீட்  தேர்வில் தேர்ச்சி பெற்ற மாண விக்கு இனிப்புகள் வழங்கியும் வெகுவாக பாராட்டி வாழ்த்துக் களை தெரிவித்து வருகின்றனர்.