districts

img

தேனியில் சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், தமிழறிஞர்களின் புகைப்படக்கண்காட்சி திறப்பு

தேனி, ஜூன் 10- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிக்காவ லர்கள் மற்றும் தமிழறி ஞர்களின் நிரந்தர புகைப்பட க்கண்காட்சியினை ஜூன் 9 அன்று மாவட்ட ஆட்சித்தலை வர் க.வீ.முரளீதரன்திறந்து வைத்து, மலர்தூவி, மரியாதை செலுத்தினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் , ஆங்கிலேயர்களைத் தீர முடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்க ளின் பங்களிப்பை பறை சாற்றும் வகையில் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட் டத்தில் செய்தி மக்கள் தொ டர்புத்துறையின் சார்பில் “விடுதலை போரில் தமிழ கம்” என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம் பெறும் என்றும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியா கங்களை பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறை யினர் அறிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்திகள் பொதுமக்களின் பார்வைக் காக அனுப்பப்படும் என அறிவித்து, அதனை செயல் படுத்தினார். மேலும், இந்திய விடுத லைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த-அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த-அறியப்படாத வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெறச் செய்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கண்டு களித்திட ஏதுவாக பல்துறை பணி விளக்க கண்காட்சி ஒரு வார காலம் நடத்தப்பட்டது.  

அதனைத்தொடர்;நது, தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வருகை தரு கின்ற பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகை யில், செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பில் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகி கள், மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின் நிரந்தர புகைப்படக்க ண்காட்சி அமைக்கப்பட்டுள் ளதை மாவட்ட ஆட்சித்தலை வர்  திறந்து வைத்து, மலர் தூவி, மரியாதை செலுத்தி, பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) க.அன்பழ கன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) நா.விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.