districts

கடன் வழங்கி, செலுத்திய பின் மிரட்டி பணம் வசூல் புனேவைச் சேர்ந்த 4 பேர் கைது

தேனி, ஜூன் 7- தேனியில் ஆன் லைன் மூலம் கடன்  வழங்கி மோசடியில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த 4 பேரை செவ்  வாய்கிழமை, தேனி சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(35). இவர், தேனியில் புத்தக் கடை வைத்து  நடத்தி வருகிறார். இவர், கடந்த 2021ம்  ஆண்டு கரோனா தடுப்பு பொது முடக்க  காலத்திஸ் கடை அடைக்கப்பட்டிருந்த தால், தனி நபர் கடன் வாங்குவதற்காக சமூக  வலைதளத்தில் கடன் வழங்கும் நிறுவ னங்கள் குறித்து தேடியுள்ளார். இதில், நல்ங்க் ப்ர்ஹய் என்ற செயலியை தர விறக்கம் செய்து, தனது சுய விபரம், புகைப்படம் ஆகிய விபரங்களை பதவிவு செய்துள்ளார். இதைடுத்து, ராஜேஷ் குமாரை தொலைபேசி மூலம் தொடர்பு நபர், அவருக்கு ரூ.6,000 கடன் வழங்கு வதாகவும், அதை 7 நாட்களுக்குள் திரும்பச்  செலுத்தி விட வேண்டும் என்றும் கூறி யுள்ளார். இதையடுத்து, ராஜேஷ்குமாரின் வங்கிக் கணக்கு விபரத்தை பெற்றுக் கொண்டு கடன் தொகையில் ஜி.எஸ்.டி.,  சேவை கட்டண பிடித்தம் போக கடன் ரூ.5,200ஐ வழங்கியுள்ளனர். கடன் தொகை ரூ.6,000ஐ ராஜேஷ்குமார் ஒரு வாரத்திற் குள் திரும்பச் செலுத்தி விட்ட நிலை யில், சில நாட்களுக்குப் பின்னர் ராஜேஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், கடன் தொகை கணக்கில் வரவாகவில்லை என்றும், ரூ.6,000ஐ உட னடியாக செலுத்தாவிட்டால், அவரது சுய  விபரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் என்று எச்சரித்ததாக கூறப் படுகிறது.

 இதனால், ராஜேஷ்குமார் ,அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் மீண்டும் ரூ. 6,000 செலுத்தியுள்ளார். சில வாரங்க ளுக்குப் பின்னர் ராஜேஷ்குமாரை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடன் வழங்கிய நிறுவனத்தைச் சேர்ந்தவர், அவர் கடன் தொகை, காலதாமதக் கட்டண மாக மொத்தம் ரூ.8,400 செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தா விட்டால் அவரது புகைப்படத்தை ஆபாச மாக சித்தரித்து, அவரது கைபேசியில் உள்ள தொடர்பு எண்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, கடந்த 2022, பிப்.15ம்  தேதி அவர்கள் குறிப்பிட்ட இணைய தள  பணம் பரிவர்த்தனை கணக்கிற்கு ரூ.8,400ஐ அனுப்பி வைத்த ராஜேஷ்குமார், இது குறித்து தேனி சைபர் கிரைம் பிரிவு போலீ சாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகா ரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குறிப்பிட்ட இணைய தள பணம் பரிவர்த்தனை கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கினை கண்டறிந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள இந்த வங்கி கணக்கில் கடந்த 2022, மார்ச் மாதம் முதல் மே மாதம்  வரை மொத்தம் ரூ.11 கோடிக்கு பண பரி வர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.  

இந்த விபரங்களின் அடிப்படையில் பூனே சென்ற போலீசார் அங்கு, விரைவுக் கடன் மோசடியில் ஈடுபட்ட மஹரந்த்(31),  பிரபுல்(46), ராஜேந்தர்(42), தயானேஷ்வர் (42) ஆகியோரை கைது செய்தனர். இவர் கள் பூனேவில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவருக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது ஆதார் எண் மற்றும் புகைப்  படத்தை பெற்று அதன் மூலம் வங்கிக்  கணக்கு தொடங்கி மோசடி பண பரிவர்த்த னையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து ரூ.ஒரு லட்சம், 2 கணினிகள், 20 மடிக்  கணினிகள், 10 கைபேசிகள், சிம் கார்டு,  ஏடிஎம் கார்டு மற்றும் கணினி உபகரணங் கள் பறிமுதல் செய்யப்பட்டது.