districts

img

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி இடதுசாரிகள்-விசிக ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 19-  இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாகும் அக்னிபாத்  திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் இடதுசாரிக்கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது .  தேனி பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வ ரன் தலைமை வகித்தார் . மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை சிறப்பு ரையாற்றினார் .விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், எஸ்யுசிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் முருகேசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் டி.நாக ராஜ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மேலும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், தாலுகாச் செயலாளர் இ.தர்மர், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி. சண்முகம் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்
பெரியகுளத்தில் அ.இ.பார்  வர்டு பிளாக் நகர பொதுச்செய லாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ப. நாக ரத்தினம் (விசிக,) எம்.வி.முருகன் எஸ்.இராமச்சந்திரன்,ஆர்.கே. ராமர், ஏ. மன்னர்மன்னன் (சிபிஎம்) காசிவிஸ்வநாதன் (சிபிஐ) மு. ஆண்டி, (ஒன்றிய செயலாளர்.  விசிக,) அ.ஜோதிமுருகன் (நகர செயலாளர். ( விசிக,) சேகுவாரா (விசிக,) ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்  பினர் எம். இராமச்சந்திரன் நிறை வுரையாற்றினார்.