districts

தேனியில் நாளை கடன் முகாம் தொழில் முனைவோருக்கு அழைப்பு

தேனி, பிப்.21- கடன் முகாமில் பங்கு பெற்று தொழில் துவங்க முன்வரு மாறு தொழில் முனைவோர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசால், தேனி மாவட்ட தொழில் மையம்  மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறு வன மேம்பாட்டுத் திட்டம் , படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு, நிறுவ னங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கின்றது.  இந்த திட்டங்களின் கீழ், தேனி ஆட்சியர் தலைமை யில் பிப்ரவரி 23 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், தொழில்  முனைவோர்களுக்கான கடன் முகாம் நடைபெற உள்ளது. கடன் முகாமில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டு கடன் விண்ணப்  பத்தினை உடனடியாக பரிசீலனை செய்து கடன் ஒப்பளிப்பு பெற துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே தேனி மாவட்ட தொழில்முனைவோர்கள் இவ்வரிய கடன் முகாமில் தங்களின் ஆதார் அட்டை,  பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்  சான்றிழ், குடும்ப அட்டை/ ஸ்மார்ட் கார்டு, திட்ட அறிக்கை, இயந்திரங்களுக்கான விலைப்பட்டியல் மற்றும்  பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.