districts

img

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 8- நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 31 சதவீதம் வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி பொது விநி யோக திட்டத்தை தனித்துறையாக அறி விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலு வலகம் முன்பு சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்  கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பயோமெட்ரிக் முறையில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும் .பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்ட பொருளாளர் பி.கருப்பசாமி தலைமை வகித்தார் .மாவட்ட தலைவர் எம்.ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயல் தலைவர் டி. பிச்சைமணி ,மாவட்ட செயலாளர் செந்தில் காமு ஆகியோர் பேசினர் .மாதர் சங்க மாவட்ட செயலாளர் சு.வெண்மணி ,கட்டுமான தொழி லாளர் சங்க மாநில செயலாளர் ஜி.சண் முகம், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி ,அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்தையா உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர் .

திண்டுக்கல் 
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழி யர் சங்கம் (சிஐடியு )சார்பாக புதனன்று ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் எம்.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச்செய லாளர் மு.சாதிக்அலி, பொருளாளர் எம்.சக்திவேல், சிஐடியு மாவட்டத்தலைவர் கே. பிரபாகரன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பால்ராஜ், சென்னிதுரை, செந்தில்குமார் உள்  ளிட்டோர் பேசினர்.