கடமலைக்குண்டு, ஜுன் 9- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே ஓயாம்பாறை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக வருசநாடு போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செவ்வாய்க்கிழமை காலையில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி. மகாலிங்கம், வருச நாடு காவல் சார்பு ஆய்வாளர் அருண் பாண்டியன் தலைமையில் 10க்கும் மேற் பட்ட போலீசார் வருசநாடு வனத்துறையின ருடன் இணைந்து ஓயாம்பாறை வனப்பகு தியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓயாம்பாறை வனப்பகுதியில் ஊசி மலைக்கரடு என்ற இடத்தில் சில கஞ்சா செடிகள் இருப்பதை போலீசர் கண்டு பிடித்தனர். மேலும் அதே பகுதியில் 50க்கும் மேற்பட்ட குழிகளில் கஞ்சா பயிரிட்டு அதனை சமீபத்தில் வெட்டி எடுத்து சென்று இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்த னர். இதனையடுத்து அங்கிருந்த சில கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட காந்திகிராமத்தை சேர்ந்த பழ னிச்சாமி (வயது 57), தண்டியங்குளம் கிரா மத்தை சேர்ந்த செல்வம் (60), பெருமாள் (36), வாலிப்பாறையை சேர்ந்த சந்திரன் (45), தும்மக்குண்டுவை சேர்ந்த மற்றொரு பெரு மாள் (65) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடை பெற்ற விசாரைணயில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கஞ்சா செடிகளை அறுவடை செய்து விற்பனைக்காக சாக்கு மூட்டை களில் அடைத்து அதனை தண்டியங்குளம் மலைப்பகுதியில் மறைத்து வைத்திருப்ப தாக தகவல் தெரிவித்தனர். இதனை யடுத்து அங்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஆண்டி பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.