தென்காசி, ஜன .25- தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே மூலக்கரையூரில் செய்யது பீடி தொழிலாளர்கள் கிளை அமைப்பு கூட்டம் ஜனவரி 24 ஆம்தேதி ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு பீடி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி.கலா, பீடி சங்க கீழப்பா வூர் ஒன்றிய தலைவர் எஸ். கற்பகவல்லி ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பங்கேற்ற னர். பீடி சங்க கிளை தலைவர் எம்.ராமலட்சுமி, செயலாளர் டி.லலிதா, பொரு ளாளர் எஸ்.மாலையம்மாள் என்ற மாலா, துணைத்தலைவர் எஸ்.நெல்லி அம்மாள், துணைச்செயலாளர் எம்.முனியம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் தரமான இலைகள் ஆயிரம் பீடிக்கு 700 கிராம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.