districts

img

மழைக்காலத்தில் வெள்ளப்பாதிப்பை குறைக்க தாமிரபரணி ஆற்றை மறுசீரமைக்கும் பணி

தூத்துக்குடி, ஜூலை 6- தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் மதகில் இருந்து எக்ஸ்னோரா இன்டர்  நேஷனல் பவுண்டேஷன் மூலம் கோமாட்சு (Komatsu) சமூக பொறுப்பு  நிதியிலிருந்து தாமிரபரணி ஆறு மறு சீரமைக்கும் பணியினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் ஜூலை 6 அன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் கனிமொழி எம்.பி.,தெரி விக்கையில், தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு கடந்த வருடம் பெய்த கன  மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவு  பாதிப்பு ஏற்பட்டது. எனவே நீர் நிலை களுக்கு தண்ணீர் வரும் வழித்தடங் களை தூர்வார வேண்டும் என்று அனை வரும் வலியுறுத்தினர். எனவே இந்த  ஆண்டு மழைக்காலத்திற்கு முன்னதாக  தூர்வார வேண்டும் என்பதற்காக இன்று  தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தினால் அதிக  வெயில் மற்றும் அதிக மழை ஏற்படு கிறது. பருவம் தவறி மழை பெய்கிறது.  எனவே மழை எந்த அளவுக்கு பெய் யும் என்று சொல்ல முடியவில்லை. நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களை சரிசெய்துவிட்டால் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பினை குறைப்பதுடன், தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தலாம்.

பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகள், பழைய துணிகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் போன்றவற்றை கொட்டக்கூடாது. இதனால் குடிநீர் பாதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களால் நீர்  நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள்  பாதிக்கப்படுகின்றன. எனவே பிளா ஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.