districts

img

தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் பிறந்தநாள்

சுதந்திரப் போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் 136 ஆவது பிறந்த  தினம் வியாழனன்று கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு தூத்துக்குடி சிதம்பர நகர் மெயின் ரோட்டில் விஸ்வநாத தாஸின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட துணை தலைவர் பெருமாள், கவுரவ தலைவர் சதாசிவம், செயலாளர் நாகராஜ், மாதர் சங்க மாவட்ட தலைவர் பூமயில், வேம்பார் பகுதி மாவட்ட துணை தலைவர் முனியசாமி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.