தூத்துக்குடி, டிச. 9 தூத்துக்குடி லேபர் காலனியை சேர்ந்த வர் சரவணகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஹரிணி (20). இவர் தூத்துக் குடி அரசு நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். புதனன்று ஹரிணி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். இது தொடர்பாக தெர்மல்நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவிக்கும் விருது நகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கு பழக்கம் இருந்ததாகவும், அந்த வாலிபர்தான் ஹரிணியின் சாவுக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்தனர். அந்த வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உற வினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், காவல் ஆய்வாளர் அய்யப் பன் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று 2-ஆவது நாளாக மாணவி உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவியின் உடல் அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டு உள்ளது.