districts

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி, மே 11 தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஒரு யூனிட்டில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.  தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210  மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள்  மூலம் தினமும் 1,050 மெகாவாட்வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  காரணமாக 3ஆவது யூனிட்டு தவிர மற்ற நான்கு யூனிட்டுகளி லும் மின் உற்பத்தி நேற்று (திங்கள்கிழமை) முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, அனல் மின்நிலையத்தில் 80 ஆயிரம் டன் வரை  நிலக்கரிகையிருப்பு உள்ளதாகவும், அதன் மூலம் தொடர்ச்சி யாக 5 யூனிட்டுகளையும் இயக்க முடியாததால், நிலக்கரி கையிருப்பு அதிகரிக்கும் வரை ஒரு யூனிட்டில் மட்டும் மின் உற்பத்தியை தொட ர திட்டமிட்டுள்ளதாகவும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.