districts

img

டிஎன்எஸ்டிசி ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஆக. 23 டிஎன்எஸ்டிசி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்க உறுப்பினர் எஸ்.மனோ கரனை யும் அவர் மனைவி யையும் திருச்செந்தூர் கோவில் வாசலில் நின்ற பழனி பேருந்தில் தூத்துக் குடி செல்வதற்கு ஏறி உட் கார்ந்திருந்தனர் . அவர்க ளை அந்த பேருந்து ஓட்டுநர் உமாசங்கர் கடுமையாக பேசி மதுரை செல்பவர்கள் ஏறவும் நீங்கள் கோவில் பட்டி பேருந்தில் வரவும் என்று சொல்லி இறக்கி விட்டு உள்ளார். அந்த பேருந்து நடத்து நர் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர் சொல்லியும் அந்தப் பேருந்து ஓட்டுநர் அவர்கள் இருவரையும் ஏற்றவில்லை. இத்தகைய செயலில் ஈடுபட்ட ஓட்டுநர் உமாசங்கர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டிஎன் எஸ்டிசி  தூத்துக்குடி மண்டல  அலுவலகம் முன்பு டிஎன்எஸ் டிசி    ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கிளை செயலாளர் பெலிக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் எட் டப்பன் முன்னிலை வகித்தார்.  டிஎன்எஸ்டிசி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில உதவி செயலாளர் சிவ தானு தாஸ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட உதவி தலைவர் தாஸ், நிர்வாக குழு உறுப்பினர்கள் தாணுமலையான், செல்வம், பொருளாளர் சுப்பிர மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.