தூத்துக்குடி, டிச. 26 முத்தையாபுரம் அருகே குடியி ருப்புப் பகுதியில் அமையவருக்கும் செல்போன் கோபுரத்தை அகற்ற கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட முனியசாமி கோவில் தெரு, வடக்கு தெரு, பெரி யார் தெரு, தோப்பு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். பெரும்பகுதி கூலி வேலை செய்யும் ஏழை எளிய மக்கள் ஆவார் கள். குடியிருப்புப் பகுதியில் சண்முக கனி என்பவர் நிலத்தில் தனியார் நிறுவ னமான ஏடிசி இன் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கான்கிரீட் அமைத்து வருகின்றனர். நெருக்கமாக உள்ள குடியிருப்புப் பகுதியில் மேற்கண்ட செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதால் சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி செல்போன் கோபுரப் பணிகளை பொது மக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். தற்போது மின்சார வாரியத்தில் இருந்து இணைப்பு கொடுப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாக தெரிகிறது பொதுமக்களின் எதிர்ப் பையும் மீறி மேற்கண்ட செல்போன் டவர் அமைக்கும் பணியை தொடர முயற்சிக்கிறார்கள். எனவே பொது மக்களுக்கும் சுற்றுச்சூழல் சூழ லுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தை அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்டக் குழு உறுப்பினர் சரஸ்வதி, புறநகர் செயலாளர் கண்ணகி, ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.