தூத்துக்குடி, மார்ச் 5- தூத்துக்குடி மாவட்டம் எட்டை யபுரம் அருகே உள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரி யராக பணியாற்றி வருபவர் கயத் தார் அருகே உள்ள கம்மாப்பட்டி பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி. தற்போது கோவில்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக துரைப்பாண்டி வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று மன் னர்கள் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைப்பாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பதும், பல்வேறு கலை நிகழ்ச்சி களிலும் கலந்துகொண்டு பரிசுகளை யும் வென்றுள்ளார். சிறுவயதில் அவ ரிடம் இருந்த ஆர்வம், துடிப்பு ஆகி யவை தான் ஆசிரியராக பொறுப்பு ஏற்றதும், அதனை மாணவ-மாணவி களின் கற்றலை ஊக்குவிக்கவும், அவர்கள் புரிந்து ஆர்வமுடன் படிப்ப தற்கும் பயன்படுத்தி கொண்டார்.
பல வேடங்களில் அசத்தல்
தமிழ் பாடத்தில் வரக்கூடிய பாடல்கள், வரலாற்று மற்றும் சுதந் திர போராட்ட நாயகர்கள் வேடம ணிந்து துரைப்பாண்டி பாடங்களை மாணவர்களுக்கு கற்று தந்து கொண்டு இருக்கிறார். திருவள்ளு வர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜ ராஜசோழன் என தான் சொல்லிக் கொடுக்கும் வகுப்பில் பாடத்தில் வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வேடங்களை அணிந்தவாறு பாடம் எடுத்து அசத்தி வருகிறார். 2014ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைப்பாண்டி வேலூர் அணைக்கட்டு, புதுக் கோட்டை மாவட்டம் மற்றும் தூத்துக் குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி 4 வது பள்ளியாக வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேட மணிந்து சென்று மாணவ-மாணவி கள் மத்தியில் பாடங்களை எளிதில் புரியும்படி சொல்லிக் கொடுத்து வருகிறார்.
கம்பீரத்துடன் பாடம்
வேடமணிய தேவையான பொருள்களுக்காக தனது ஊதி யத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வாங்கி வருகிறார். தொடக்கத்தில் வேடமணி யும்போது கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், துரைப்பாண்டியன் முயற்சிக்கு அப்பள்ளி மற்ற ஆசிரி யர்கள், மாணவர்கள் உதவி புரிய தொடங்கியுள்ளனர். அவர் வேடம் போடுவதற்கு துணை புரிந்து வரு கின்றனர். வேடம் அணிந்தது மட்டு மல்ல, அந்த வேடத்திற்குரிய கம்பீ ரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவ தால் மாணவர்கள் பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளுகின்றனர். மேலும் தேர்வுகளில் அசத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு எளிய முறை
இதுகுறித்து துரைப்பாண்டி கூறுகையில், “மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்காமல் மனப்பாடம் செய்து படிக்கும் நிலை இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் காட்சி பொருளாக இருந்தால் அதனை புரிந்து கொள்கின்றனர் என்பதால் எனது வகுப்பறையில் மாற்றம் கொண்டு வர வேடமணிந்து பாடத் தினை கற்பிக்கும் முறையை கொண்டு வந்தேன். இதனால் மாண வர்கள் இடையே மனப்பாடம் செய் வது குறைந்து பாடங்களை புரிந்து கொள்ள தொடங்கினர். கொரோனா விற்கு பின்னர் மாணவர்கள் - ஆசி ரியர்கள் இடையே இடைவெளி அதி கமாக இருந்த காரணத்தினால் தினந் தோறும் மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள், என்னுடைய முயற்சிக்கு தங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள்” என்றும் கூறினார்.
-விக்னேஷ்