தூத்துக்குடி, ஜூன் 4 - தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி கருணாநிதி 2ஆவது முறையாக சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி க்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடந்தது.
இந்த தொகுதி யில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி தொகுதி தேர்தலில் திமுக கூட்டனி சார்பில் கனிமொழி கருணா நிதி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிவ சாமி வேலுமனி, பா.ஜ.க. கூட்டனி சார்பில் த.மா.க வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத்ஜேன், மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை செவ்வா யன்று வ.உ.சி பொறியியல் கல்லூரி யில் நடந்தது. 2019 நாடாளுமண்ற தேர்தலில் 3,47,209 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் 4,84,775 வாக்குகள் பெற்று 3,50,390 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டா வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
கனிமொழி (திமுக) - 4,84,775
ஆர்.சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,34,385
ரொவினா ரூத் ஜேன் (நாதக) - 1,10,120
எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,05,796
நோட்டா - 8805
அமைச்சர்கள் வாழ்த்து
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் மீண்டும் இரண்டாவது முறை வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 115, 128ல் வாக்கு கள் எண்ணும் போது 2 வாக்கு பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த 2 வாக்குப்பதிவு எந்திரங்களும் எண்ணப்படவில்லை.